டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் தொடர் இந்தியாவுடனா?

கவலையில் தென்ஆபிரிக்க தலைவர்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறையை ஐசிசி அறிமுகப்படுத்திய நிலையில் முதல் அணியாக இந்தியாவை எதிர்கொள்வது கடினமானது என்று தென்ஆபிரிக்க அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி அதிகாரபூர்வமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் முதல் போட்டி இன்று முதலாம் திகதி அவுஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியாகும்.

தென்ஆபிரிக்கா அணி ஒக்டோபர் 2-ம்திகதியில் இருந்து இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறையின் கீழ் வருகிறது. முதல் தொடரே இந்திய மண்ணில் என்பது கடினமானது என்று தென்ஆபிரிக்க அணியின் தலைவர் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏதாவது வித்தியாசமானத்தை வெளிப்படுத்த விரும்பினால், அதில் தென்ஆபிரிக்காவின் ஈடுபாடு குறிப்பிட்ட தகுந்த வகையில் இருக்கும். டெஸ்ட் போட்டிக்கான புத்துணர்ச்சிதான் சம்பியன்ஷிப். தென்ஆபிரிக்க வீரர்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

எந்தவொரு அணியும் இந்தியா சென்று விளையாடுவது கடினம் என்று சொல்லும். அந்த வகையில் எங்களுக்கு சம்பியன்ஷிப் தொடர் கடினமாக தொடங்கப் போகிறது. இறுதியாக ஒவ்வொரு அணிகளும் இந்தியா சென்று விளையாட வேண்டும். நாங்கள் சிறப்பாக தொடங்குவோம் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

Thu, 08/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை