சிட்னி நகரில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தியவர் கைது

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆடவர் ஒருவர் யோர்க் ஸ்டீரீட்டில் கத்தியுடன் நடமாடுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கே சென்றதாக, அவுஸ்திரேலிய பொலிஸார் பேஸ்புக் பதிவில் தெரிவித்தனர்.

ஆனால், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் செல்லும்முன் அந்த ஆடவர் ஒருவரைக் கத்தியால் குத்தியதாகப் பலரும் புகார் செய்தனர். அந்தச் சம்பவத்தில் பெண்மணி ஒருவர் தாக்கப்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண்ணின் உடல்நிலை சீராய் உள்ளதாகக் கூறப்பட்டது. தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் ஆடவரைப் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தனர். தற்போது சிட்னி மத்திய வர்த்தக வட்டாரத்தில் எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

சம்பவம் தொடர்பான படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Wed, 08/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை