வடக்கு, கிழக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட வேலைத்திட்டம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இருப்பதை நாம் அறிவோம். இப் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இந் நாட்டில் அனைவரும் சமனானவர்கள். ஆனால் இங்கு ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாக நடத்தப்படுவதை காண்கின்றோம். சில பகுதிகளில் கல்வி,பொருளாதரம், மற்றும் தொழில் வாய்ப்புகளில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல நாட்டின் வேறு சில பகுதிகளிலும் இந்த பாகுபாடுகள் காட்டப்படுகின்றன.

ஒருசாராரை உயர்த்தியும் மறுசாராரை தாழ்த்தியும் பார்க்கும் மனோநிலையை இல்லாமல் செய்வோம். எல்லோருக்கும் ஒரே சலுகைகைளை வழங்குவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை நான் முன்னெடுப்பேன் என்றார்.

 

சாவகச்சேரிகுறுப் நிருபர்

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை