பரசூட் வீரர் பயிற்சின் போது உயிரிழப்பு

10,000 அடி உயரத்திலிருந்து விழுந்தபோது சம்பவம்

அம்பாறை உகனை விமானப்படை முகாமில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் மூன்றாம் படைப் பிரிவின் பயிற்சி அதிகாரி ஒருவர் பரசூட் செயலற்று போனதால் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை அவர் ஏனைய படை வீரர்களுக்கு பரசூட் பயிற்சியை வழங்கிக்கொண்டிருந்தபோது பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக

இராணுவ தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரரான எச். எச். ஏ. சி. குமாரசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நேற்றைய தினம் உகன விமான படை முகாமுக்கு அருகில் வனப் பகுதியில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அம்பாறை அரசாங்க மருத்துமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட போதும் ஏற்கனவே அவர் உயிரிழந்திருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். (ஸ)

 

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை