அளவுக்கு மீறி மதுபானம்: விமானிகள் இருவர் கைது

ஸ்கொட்லந்தில் வரம்புக்கு மீறி மது உட்கொண்டதாக நம்பப்படும் விமானிகள் இருவர் விமானத்தைச் செலுத்தும் முன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானம் ஸ்கொட்லந்திலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் செல்லவேண்டியிருந்தது. அவர்களைச் சோதனை செய்தபோது சுவாசக் காற்றில் வரம்புக்கு மீறிய மதுபான அளவு தென்பட்டது.

விமானிகள் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். சம்பவத்தைத் தொடர்ந்து, விமானம் ரத்து செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பே மிக முக்கியமானது என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.

ஊழியர்கள் உயர்ந்த தரநிலைகளுக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும். அளவுக்கு மீறிய மதுபானம் உட்கொள்வது போன்ற சம்பவங்களை நிறுவனம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

விமானிகள் உடனடியாகச் சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை