கடும் காற்றினால் குடியிருப்புக்கள் சேதம்

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பகுதிளில் வீசிய கடும் காற்றினால் மக்களின் குடியிருப்புக்களின் வீட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட முகமாலை இந்திரபுரம் பகுதியில் 19 வருடங்களின் பின்னர் மீள்குடியேரிய மக்களின் தற்காலிக குடிசைகள் நேற்று முன்தினம் வீசிய கடும் காற்றினால் சேதமடைந்தன.

காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்கு வசிக்கும் மக்கள் குடியிருந்த தற்காலிக குடிசையின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் உடமைகளும் சேதமடைந்துள்ளன. தமக்கு ஆரம்பத்தில் தரப்பால்கள் தந்தபோதும் அது இப்பொழுது பழுதடைந்து விட்டதாகவும் மக்கள் கூறினர்.

கிளிநொச்சி குறூப் நருபர்

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை