தனியார் பஸ் - முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து

2 பேர் ஸ்தலத்தில் பலி

நீர்கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் தங்கொட்டுவ நகரில் நேற்று தனியார் பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் தங்கொட்டுவ வைத்தியசாலையில் பணிபுரிந்த 59 வயதான தோன குமுதினி தம்மிகா ஜயக்கொடி என்ற பெண்ணும், முச்சக்கரவண்டியின் சாரதி 59 வயதான ஹந்துன்குட்டி ஆரச்சிகே ரஞ்ஜித் என்பவரும் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தோன குமுதினி தம்மிகா ஜயக்கொடி பணிக்குச் சென்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தின் போது முச்சக்கரவண்டியை மோதிய பஸ் பின்னர் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கடைத்தொகுதியிலும் மோதி சேதம் விளைவித்துள்ளது. பஸ்ஸில் பயணித்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Sat, 08/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை