வடக்கு, கிழக்கில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்  காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவான  பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, தற்காலிகமாக வீசும் பலத்த காற்றினாலும் மின்னல் தாக்கங்களினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

Sat, 08/17/2019 - 08:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை