பாதுகாப்பற்ற வடிகானால் மக்களுக்கு அசௌகரியம்

ஒலுவில் பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள வடிகானுக்கு பாதுகாப்பு மூடிகள் போடப்படாமையினால் அவ் வீதிகளில் பயணிப்போர் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் இரவுவேளையில் பயணிப்போர் பாதுகாப்பு மூடிகள் இல்லாததினால் வடிகான்களுக்குள் சறுக்கிவிழுந்து விபத்துக்குள்ளாகியும் வருகின்றனர்.

அத்துடன் வடிகான்களுக்குள் குப்பைகள், மண் அடைத்தும் கிடப்பதினால் மழைகாலங்களில் நீர்வடிந்தோட முடியாதுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய்க்கும் மக்கள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே, நீண்டகாலமாக கொங்கிறீட் மூடிகள் இன்றியுள்ள வடிகானுக்கு கொங்கிறீட் மூடிகளை இடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒலுவில் விசேட நிருபர்

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை