பெல்மதுளை ஹேன தோட்ட வீடொன்றில் திடீர் தீ விபத்து

இரத்தினபுரி , பெல்மதுளை ஹேன தோட்டத்தில் வீடொன்று திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த வீடு பாதிக்கப்பட்ட தொழிலாளியினால் நிர்மாணிக்கப்பட்டது.

சனிக்கிழமை இரவு 7.50 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து வீட்டுஉரிமையாளர் கருத்துதெரிவிக்கையில், திருமணம் முடித்து பலவருடங்கள் பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கூட்டுகுடும்பமாக 8 அடிலயன் காம்பிராவில் வசித்துவந்தோம்;. தொடர்ந்து அங்கு ஒன்றாக வசிக்க முடியாத காரணத்தினால் எனது சொந்த செலவில் புதிதாக தனியாக வீடொன்றை அமைத்தேன். அந்த வீடே எரிந்துள்ளது. இரவு நானும் எனது மனைவியும் பக்கத்திலுள்ள தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எமது பிள்ளைகள் பக்கத்து வீட்டிலிருந்த காரணத்தினால் உயிர்த்தப்பியுள்ளனர். சம்பவம் அறிந்து உடனடியாக ஸ்தலத்திற்கு சென்று பார்த்த போது தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அருகில் செல்லமுடியவில்லை. இதனால் எந்த பொருட்களையும் மீட்கமுடியவில்லை. காலகாலமாக சம்பாதித்த பொருட்கள் கண்முன்னே எரிந்து சாம்பலாகின. தீ விபத்து எதனால் ஏற்பட்டுள்ளது என்று தெரியாது. இது குறித்து பெல்மதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரிதினகரன் நிருபர்

Wed, 08/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை