அமைச்சர் சம்பிக்கவின் நூல் வெளியீட்டு விழா

'வாழ நினைக்கும் நாடு'

அமைச்சர் சம்பிக்க ரணவக்க எழுதிய 'வாழ நினைக்கும் நாடு'(இன்ன ஹிதன ரட்டக்) நூல் வெளியீட்டு விழா இன்று(27) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெறும்.

இவர் பல நூல்களை எழுதியுள்ளதோடு புகைப்படப்பிடிப்பாளராக,சித்திரக் கலைஞராக, சூழலியலாளராக திறமைகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் காணப்படும் நிதி நெருக்கடி, கற்றவர்கள் நாட்டைவிட்டுச் செல்வது, மோசடி, தேசிய பாதுகாப்பு,அழிந்துவரும் தேசிய வளங்கள் போன்ற பல்வேறு சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது போன்றவற்றை நூலில் அமைச்சர் விளக்கியுள்ளார். (பா)

 

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை