முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிச் சென்று வாகனமொன்று விபத்திற்குள்ளானதில், ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (10) காலையில் கொக்குளாய், முகத்துவாரம் பகுதியினை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம், ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி வந்தபோது வீதியினை விட்டு விலகிச் சென்று தொலைத்தொடர்பு கம்பமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் வாகனத்தின் சாரதியே உயிரிழந்துள்ளார். குறித்த வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(மாங்குளம் குரூப் நிருபர் - சண்முகம் தவசீலன்)
Sat, 08/10/2019 - 15:44
from tkn