காசல் ரீ நீர்தேக்கத்தில் மீட்ட ஆண்சிசுவின் தாயார் கைது

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் சிசுவின் தாயார் பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் .

கடந்த சனிக்கிழமை காலை ஆண் சிசுவின் சடலம் ஒன்று காசல் ரீ நீர்தேக்கத்தில் மிதந்து கொண்டிருப்பதை மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் கண்டு ஹற்றன் பொலிஸாருக்கு தகவல் அறிவித்தனர். இதனையடுத்து சிசுவின் சடலம்

மீட்கப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்குட்படுத்தபட்டது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த ஹற்றன் பொலிஸார் அன்றைய தினம் டிக்கோயா வனராஜா பகுதியில் வைத்து சிசுவின் தாயாரை கைது செய்துள்ளனர். இச'சம்பத்தில் கைது செய்யபட்ட சிசுவின் தாயார் ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை