யானை தாக்கி 8 வயது சிறுமி பலி

இருவர் படுகாயம்

காட்டு யானைத் தாக்குதல் காரணமாக 08 வயது சிறுமி உயிரிழந்துடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அதிகாலை 1.30 மணியளவில் மஹியங்கனை குடாஒய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மஹியங்கனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காட்டுயானை வீட்டு சுவரை தள்ளிய போது நித்திரையிலிருந்த சிறுமியின் மீது சுவர் விழுந்துள்ளது. இதனால் சிறுமி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமி மாப்பாக்கட பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவியாகும்.

மகியங்கனைப் பொலிஸார் மேல திக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹற்றன் சுழற்சி அக்குறணை குறூப் நிருபர்கள்

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை