ஆஸியில் 61 மில். டொலர் போதைப்பொருள் பறிமுதல்

அவுஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் நடத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்புச் சோதனைகளின்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் பிரிட்டனிலிருந்து போதைப் பொருளை விநியோகம் செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்களாவர். அவர்களிடமிருந்து அந்த வட்டாரத்தில் இதுவரையில்லாத வகையில், 61 மில்லியன் டொலர் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளைக் கொண்டு 12 மில்லியன் எக்ஸ்டஸி மாத்திரைகளைத் தயாரிக்க முடியும்.

கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் குடிமக்கள் நால்வரும் 40 லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள். ஓர் அவுஸ்திரேலிய ஆடவருக்கு வயது 26 என்பதோடு மற்றோர் அவுஸ்திரேலியப் பெண்ணின் வயது 51 ஆகும்.

நியூசிலந்தின் ஒக்லந்தில் நடத்தப்பட்ட சோதனையில் 200 கிலோகிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை