வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து; 6 பேர் உயிரிழப்பு

வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52பேர்காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.இந்த விபத்து இன்று (04) அதிகாலை 04.15 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளாகி காயப்பட்டவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sun, 08/04/2019 - 08:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை