உலக சுகாதாரஅமைப்பின் மூலம் 300 மில்லியன் டொலர் நிதியுதவி

சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கு:

அரச மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரைச்சொகுசு வசதிகொண்ட உத்தியோக பூர்வ தங்குமிடங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதற்கான திட்டம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு நிதியுதவி வழங்கியுள்ளதாகவும்

 

அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் 846 ‘சுவதிவி’ நலன்புரி மத்திய நிலையங்களின் கீழ் 906 ‘சுவநாரிவ்’ மத்திய நிலையங்களும் செயற்பட்டு வருகின்றன.

இந்த மத்திய நிலையங்கள் மூலம் உடல் தொடர்பான ஸகேன், இரத்த அழுத்தம், இரத்தத்தில் சீனியின் அளவு, கொழுப்பு மற்றும் நைட்ரொக்சின் ஆகியவற்றைப் பரிசோதித்துக் கொள்ள முடியும்.

இதன் மூலம் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் இருப்பினும் இதனை 30 சதவீதமானோரே பயன்படுத்துகின்றனர்.. அத்துடன் திடீர் விபத்துப் பிரிவுகளை நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து நோயாளர்களுக்கும் தேவையான அனைத்து மருந்து வகைகளையும் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மருந்துத் தட்டுப்பாடு, மருந்து வகைகள் காலங் கடந்ததாக இருப்பதைத் தடுப்பதற்கான மென்பொருள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மருந்து தட்டுப்பாடுகளின்போது உரிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக வைத்தியசாலைப் பணிப்பாளர்களுக்கு 10 மில்லியன் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய வைத்தியசாலைக்கென 50 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை