ஷர்மிளாவின் இதய ராகத்தின்" 2வது நாயகன்

1958இல் பிறந்த கிருஷ்னண் மோகன்குமார் கலை மீது கொண்ட ஆர்வத்தினால் சிறு வயது முதல் மேடை நாடங்களில் ஆர்வம் செலுத்தினார். 40வருடங்கள் கலை உலகிற்காக தனது வாழ்வினை அர்ப்பணித்த அவர் வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள் என பல துறைகளிலும் சிறந்த நடிகராக விளங்கினார். இலங்கையின் மூத்த கலைஞர் கே.மோகன்குமார் தனது 59வது வயதில் ஜாஎலவில் காலமானார்.  

 பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள மோகன் குமார் சக்தி சின்னத்திரையின் உதவி இயக்குனராக கடமையாற்றியுள்ளார். எழுத்தாளர், தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு பரிணாமங்கள் ஊடாக மோகன்குமார் கலைத்துறைக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் வெற்றிகொண்டிருந்தார்.  

கடந்த 40ஆண்டுகளாக கலைத்துறையில் கொடிகட்டிப் பறந்த கலைஞர் கே. மோகன்குமார் இவர் சர்மிளாவின் இதய ராகம் என்ற திரைப்படத்திலே நடித்த ஒரு கலைஞராவார். உயிரே , 13பீ , முட்டை, ஒத்தல்லோ, ஆஸ்திகமா நாஸ்திகமா, சிவாஜி கண்ட இந்து ராஜ்சியம், மகரந்தம் ஆகிய நாடகங்களை நடித்துள்ளார். மகரந்தம் ஒரு வீடியோ எல்பமாம். சர்மிளாவின் இதய ராகம் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் இவர். 42சிங்களப் படங்களுக்கு நடனக்காட்சிகளை திரையிடுவதற்கு பயிற்சி அளித்தவர்.  

அந்தனி ஜீவாவின் அக்னி பூக்கள் நாடகத்தின் மூலம் நடிகனாக அறிமுகமாகிய இவர் பிரதியாக்கம், நெறியாள்கை போன்றவற்றிலும் பணியாற்றியவர். சிறிக்கியும் பொறுக்கியும் என்ற நாடகத்தில் உலகப் புகழ்பெற்ற நாடகமேதை ​ேக்ஷஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தில் ஒத்தல்லோவின் தளபதி கேசியோவாக நடித்தவர். பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்த ராஜ்ஜியத்தின் சிவாஜியின் தளபதி சந்திரமோனாக நடித்தவர்.  

கிருஷ்ண கலாலாயம் என்ற நாடகமன்றத்தை உருவாக்கி பல நாடகங்களை மேடையேற்றியவர். கலைஞர்களை பாராட்டி கௌரவித்தவர். இவ்வாறு 40ஆண்டு காலமாக கலைத்துறையில் சேவையாற்றிய கலைஞர் இவர். முரண்பாடுகளும் முற்றுப்புள்ளிகளும் இவர் நடித்த இன்னுமொரு நாடகமாகும். சிதைந்த மலர் இவர் நடித்த மற்றுமொரு நாடகமாகும். சலங்கை நாதம், மௌத்திரை, உரிமைக்குரல், புயலில் ஒரு மலர், பைத்தியங்கள் பலவிதம், மனிதன் என்னும் தீர்வு பாவக்கரை, மௌனத்திரை, அவள் மீண்டும் வருகிறாள் போன்ற நாடகங்கள் நடித்த இவர் இலங்கையில் கலைஞர்கள் இறந்தபோதும் அவர்களது நி​ைனவாக தொடர்ந்து நினைவஞ்சலி கூட்டங்கள் நடத்தி வந்த ஒரு கலைஞராவார்.

இப்படி எல்லாக் கலைஞர்களுக்கும் அனுதாபக் கூட்டம் நடத்துகின்றீர்களே ஒரு நாளைக்கு நீங்கள் இறந்தால் உங்களுக்கு யார் அனுதாபம் கூட்டம் நடத்துவார் என்று ஒருவர் கேட்டபோது, எனக்காக அனுதாபம் கூட்டம் நடத்த இதோ இந்த கலைஞர் சரவணா இருக்கிறார் என்று அவரை காட்டிக்கூறியவர். அந்த கூற்றுக்கமைய நினைவஞ்சலி கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.  

கலைஞர் கே. மோகன்குமார் நினைவாக தமிழர் நற்பணி மன்றம் எதிர்வரும் 2019.09.08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00மணிக்கு கொழும்பு புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் கலைஞனுக்கோர் கண்ணீர் துளி என்ற இந்த நிகழ்வை நடாத்தவுள்ளது. இதில் இவருடன் நடித்தவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழர் நற்பணி மன்றத்தின் சார்பில் கலைஞர்களான  கே. ஈஸ்வரலிங்கம், எஸ். சரவணா ஆகியோர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

18 வருடங்களுக்கு மேலாக மார்கழி மாதமானதும் மாலை அணிந்து ஐயப்ப விரதமிருந்து ஒவ்வொரு வருடமும் சபரி மலைசென்று தரிசனம் செய்து வந்த இவர். சபரிமலை சாஸ்தா பீடத்தின் செயலாளராகவும் நீண்டகாலம் சேவையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மிகம், கலைத்துறை என இவரது சேவைகள் நீண்டுகொண்டே சென்றது.   

Sat, 08/31/2019 - 11:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை