மண்சரிவில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் வீட்டிற்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று (14) காலை இடம்பெற்றதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் இந்நபர் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் மண்சரிவில் சிக்கி,கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நானுஓயா பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய மூர்த்தி இராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹற்றன் சுழற்சி, ஹற்றன் விசேட நிருபர்கள்

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை