பிலிப்பைன்ஸ் படகு விபத்தில் 25 பேர் பலி: ஆறு பேர் மாயம்

மத்திய பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் மீட்பாளர்கள் மேலும் சடலங்களை மீட்டிருக்கும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

கிமராஸ் நீரிணையில் திடீர் புயல் ஒன்றில் சிக்கியே கடந்த சனிக்கிழமை இந்த படகு மூழ்கியுள்ளது. இதில் 55 பேர் காப்பற்றப்பட்ட நிலையில் 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் ஆறு பேர் தொடர்ந்து காணாமல்போயிருப்பதாகவும் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸில் கடந்த காலங்களிலும் மோசமான கப்பல் பாதுகாப்பு பதிவை கொண்டுள்ளது. ஒவ்வொரு தீவுகளுக்கு இடையில் அங்கு கப்பல் போக்குவரத்தே வழக்கமானதாகும்.

பருவப் பெயர்ச்சி காலத்தில் அங்கு படகு விபத்துகள் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை