தனிப்பட்ட முறையில் 2018 மிகவும் கடினமான ஆண்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோ

தனிப்பட்ட முறையில் 2018 மிகவும் கடினமான ஆண்டு என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளை அதிக அளவில் வாங்கி குவித்தவர்.

மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மட்ரிட் அணிகளுக்காக விளையாடிய ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவான்டஸ் அணியில் உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் ரொனால்டோ மீது செக்ஸ் புகார் அளித்திருந்தார். இது மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2018-ம் ஆண்டு மிகவும் கடினமாக அமைந்தது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில்; ரசிகர்கள் நன்மதிப்பு குறித்து கேள்வி எழுப்பும்போது, அது காயத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், எனக்கு மிகப்பெரிய குடும்பம் உள்ளது. எனது மனைவி, அறிவார்ந்த குழந்தைகள் ஏராளமான விஷயங்களை புரிந்து கொண்டுள்ளனர்.

இதனால் நான் என்னுடைய வழக்கமானதை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், மீண்டும் ஒருமுறை என்னுடைய அப்பாவித்தனம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது என்னை பெருமைப்பட வைக்கிறது.

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை