நுஹா றிஷானின் INNER WINGS ஆங்கிலக் கவிதை நூல் வெளியீடு

பதுளையைச் சேர்ந்த இளங்கவிஞர் நுஹா றிஷான் எழுதிய, 'INNER WINGS' கவிதை நூலின் வெளியீட்டு விழா நாளை 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு கொழும்பு - 06 , வெள்ளவத்தையில் அமைந்துள்ள சபையார் ஹோட்டலில் இடம்பெறும்.

தேசிய மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ். சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக மொழிகள் பிரிவின் பீடாதிபதி கலாநிதி மனோஜா ஆரியரத்ன பிரதம பேச்சாளராகக் கலந்து கொள்கிறார்.

தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அஷ்ரப் (நளீமி), கல்வி ஆலோசகர் டாக்டர் ரவூப் ஷெய்ன் (நளீமி) ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர்.

நூலை சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் ஆய்வு செய்கிறார்.

கட்டிளமைப்பருவத்தில் ஏற்படுகின்ற நேர்மறை எண்ணங்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இளம் வயதினருக்கு வழிகாட்டுகின்ற கைநூலாகவும் தன்முனைப்படுத்தல் பற்றிய கருப்பொருளை உடைய நூலாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை