செரீனா, நடால் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்றில் விளையாட, அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 16ஆவது முறையாக தகுதி பெற்றார்.

3ஆவது சுற்றில் ஜெர்மனியின் ஜூலியா கோயர்ஜசுடன் சனிக்கிழமை மோதிய செரீனா 6–3, 6–4 என்ற நேர் செட்களில் வென்றார். முதல் நிலை வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.), பெத்ரா குவித்தோவா, ஸ்டிரைகோவா (செக்.), சுவாரெஸ் நவரோ (ஸ்பெயின்), அலிசான் ரிஸ்கி (அமெரிக்கா) ஆகியோரும் 4ஆவது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்றில் ஜோ வில்பிரைட் சோங்காவுடன் (பிரான்ஸ்) மோதிய நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) 6–2, 6–3, 6–2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். கெய் நிஷிகோரி (ஜப்பான்), சாம் குவெரி (அமெரிக்கா) ஆகியோரும் 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை