காவல் தெய்வ சன்னிதியில் பௌத்த கொடி ஏற்றியதால் சர்ச்சை

நுவரெலியா கந்தப்பளையில் சம்பவம்

நுவரெலியா, கந்தப்பளை தோட்டப் பகுதியில் காவல் தெய்வ சன்னதியில் பெளத்த கொடி ஏற்றப்பட்டமையால் அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது நேற்று காலை முன்னெடுக்கப்பட்டது.

கந்தப்பளை தோட்டப் பகுதியில் உள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலன்னறுவை பகுதியை சேர்ந்த தேரர் ஒருவரினால் பெளத்த கொடி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தோட்ட மக்களால் கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டதையடுத்து நுவரெலியா பொலிஸ் வலய பொலிஸ் அத்தியட்சகர், நுவரெலியா பிரதேச சபைதலைவர் வேலு யோகராஜ் ஆகியோர் சென்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடிய பின் கொடியை அகற்றினர்.

அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை