கொழும்பின் சில பகுதிகளில் இன்று (27) முற்பகல் 11 மணி வரை நீர்வெட்டு அமுலில் இருக்குமென, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய ராகம – கந்தானை, ஜா – எல, சீதுவை, கட்டுநாயக்க மற்றும் ஏக்கல உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்குமெனவும், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கொட்டுகொட, பமுனுகம, உஸ்வட்டகெய்யாவ, வலிசற, மட்டகொட, மகபாகே, கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல ஆகிய பகுதிகளிலும் நீர்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராகம ரயில்வே கடவைக்கு அருகில் அமைந்துள்ள பிரதான நீர்க்குழாயில் திடீரென ஏற்பட்ட சேதம் காரணமாக, திருத்த வேலை முன்னெடுக்கப்படுவதையிட்டு நீர்விநியோகம் தடைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.
from tkn