மாகாண மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

அக்கரைப்பற்று வலயக் கல்விப்பிரிவின் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அல் ஹம்றா மகாவித்தியாலயத்தில் வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம்பெற்று மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்த 43 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் யு.கே.அப்துல் றஹிம், பிரதி அதிபர் எம்.ஏ.கமறுன்னிசா, உதவி அதிபர் மஹ்முத் நசீம், விளையாட்டு பொறுப்பாசிரியர் ஆர்.நௌசாத் உட்பட வலயத்தலைவர்கள், ஆசிரியர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன் போது மகாண மட்டத்திற்கு தெரிவான 43 மாணவர்களும் அதிதிகளினால் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை