ஹுனுவலையில் மின் கம்பம் வான் மீது விழுந்து விபத்து

தெய்வாதீனமாக  உயிர் தப்பிய சாரதி

இரத்தினபுரி பலாங்கொ டை வீதியி ல் ஓப்பனாயக ஹுனுவல பிரதேசத்தி ல் வான் ஒன்று மின் கம்பமொன்றில் மோதியதில் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார்.

ஹுனுவல பிரதேசத்தில் நேற்றுக் காலை (17) சாரதி தூக்கியதால் வான் மின் கம்பமொன்றில் மோதி மின் வயர்கள் வானின் மீது விழுந்துள்ளன. எனினும் தெய்வாதீனமாக வான் மின்சார தாக்கத் திற்கு உள்ளாகாமையினால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த சிலரை கதிர்காமம் அழைத்து சென்று மீண்டும் அவர்களை பலாங்கொடையில் விட்டுச் செல்கையில் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் வான் மின் கம்பத்தில் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

ஓபநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

 

 

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை