தேசிய மாணவர் படையணிக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களை பயிற்சி நெறிக்கு வழியனுப்பும் நிகழ்வு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இப்பயிற்சி நெறியை பெற்றுக் கொள்வதற்காக ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலிருந்து 26 மாணவர்களும், கதிரவெளி விக்னேஷ்வரா மகா வித்தியாலயத்தில் இருந்து 24 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.பயிற்சி பெறுவதற்காக இம்மாணவர்கள், ரந்தெனிகல செல்லவுள்ளனர்.
இம்மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கல்குடா தினகரன் நிருபர்
Mon, 07/15/2019 - 06:00
from tkn