ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து அப்போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கற்பிட்டி, ஷேதவாடி பகுதியில் நேற்று முன்தினம் (11) குறித்த சந்தேகநபர், ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், விற்பனைக்காக 1,000மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த சந்தேகநபரை அவதானித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து கற்பிட்டி, பெரியகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 40வயதுடைய இச்சந்தேகநபர்   கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்டுள்ள ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர், மேலதிக நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

Sat, 07/13/2019 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை