ஷார்ஜா மன்னர் மகன் லண்டனில் மரணம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா ஆட்சியாளரின் மகன் லண்டனில் மரணமடைந்துள்ளார். ஷெய்க் காலித் பில் சுல்தான் அல் காசிமி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அவரின் உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று லண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

39 வயதான அல் காசிமி, ஒரு ஆடை ஆலங்கார நிபுணராக உள்ளார். அவரது ஆடை அலங்கார நிகழ்ச்சியும் லண்டனில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் காஸ்மி என்ற ஆண்கள் ஆடைகள் நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

நேற்றுக்காலை ஐக்கிய அரபு இராச்சியத்தில் அவரது இறுதிக் கிரியை நடைபெற்றதோடு மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டது.

1972 தொடக்கம் ஷார்ஜாவின் ஆட்சியாளராக இருந்து வரும் அவரது தந்தை ஷெய்க் சுல்தான் பின் முகஹமது அல் காசிமி இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை