சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண தொடர் : யுவான்டஸ் அணியை வீழ்த்தியது டோட்டன்ஹாம்

ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் இடையிலான சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண தொடர் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அவற்றில் சில போட்டிகள் அண்மையில் நேயர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் ஒரு போட்டியில் ஹரி கேனின் அபார கோலால் யுவான்டஸ் அணியை 3-–2 என வீழ்த்தி டோட்டன்ஹாம் அணி வெற்றி பெற்றது.

சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் யுவான்டஸ் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணியின் சார்பில் எரிக் லமேலா கோல் ஒன்றை போட்டார். இதனால் முதல் பாதி நேரத்தில் டோட்டன்ஹாம் அணி 1-–0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் யுவான்டஸ் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் ஹிகுயைன் மற்றும் 60-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் அபாரமான கோல்களை புகுத்தினர்.

ஆனால் 65-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணியின் லூகாஸ் மவுரா கோல் ஒன்றை அடித்த நிலையில், 2-2 புள்ளிகள் சமநிலை அடைந்தன.

அதன்பின் சுமார் 25 நிமிடங்களுக்கு இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் ஆட்ட நிறுத்தத்தை கணிக்கிட்டு 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. 3-வது நிமிடத்தில் ஹாரி கேன் மைதானத்தின் பாதி தூரத்திற்கு அப்பால் இருந்து உதைத்த பந்து கோலாக மாறியது. இதனால் டோட்டன்ஹாம் அணி இறுதி நேரத்தில் 3-2 என வெற்றி பெற்றது.

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை