இந்தியா தோல்வி அடைய ஜெர்சி நிறமே காரணம் -

மெகபூபா முப்தி

உலக கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைய ஜெர்சியின் நிறம்தான் காரணம் என மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து தலைவர் இயன் மோர்கன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். 338 ஓட்டங்கள் எடுத்தால், இந்தியா வெற்றி பெறும் என்ற இலக்கினை இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.

இறுதியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு காரணங்களை கூறி இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, இந்திய அணி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள்.

ஆனால், இந்திய அணி உலக கிண்ணத்தில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சிதான்’ என பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை