கறுப்பு ஜூலை நினைவேந்தல் யாழ் பல்கலையில் அனுஷ்டிப்பு

கறுப்பு ஜுலை நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று (23) நடைபெற்றது. தென்னிலங்கையில் தமிழ் மக்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டதை நினைவு கூரும் ஜூலை 23 நாளை கறுப்பு ஜூலையாகத் தமிழ் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர் . இதற்கமைய ஜூலை 23 ஆம் திகதியான நேற்று கறுப்பு ஜூலையாக நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நினைவுத் தூபியில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களும் சடரேற்றி வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்தனர். இந் நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை