சிறாஜ் மகா வித்தியாலயம் மாகாண மட்டச் சம்பியன்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில் கிண்ணியா முள்ளிப்பொத்தானை சிறாஜ் மகா வித்தியாலயம் மாகாண மட்டச் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை இராஜகிரிய மகா வித்தியாலயத்தில் (5 ம்திகதி ) மாகாண மட்ட கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 36 பாடசாலை அணிகள் பங்குபற்றின.

இதில் அரையிறுதி ஆட்டத்தில் முள்ளிப்பொத்தானை சிராஜ் மகா வித்தியாலய அணி, கந்தளாய் மத்திய மகா வித்தியாலய அணியைச் சந்தித்து, 3 : 2 அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுக் கொண்டது.

இறுதிப் போட்டியில், கந்தளாய் அக்கிரபோதி மகா வித்தியாலயத்தை எதிர்த்தாடிய முள்ளிப்பொத்தானை சிராஜ் மகா வித்தியாலய அணி 3 : 2 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று 2019 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டு, தேசிய மட்டப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுக் கொண்டது.

கிண்ணியா மத்திய நிருபர்

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை