அவசரகால சட்டம் நீடிப்பு; இன்று சபையில் விவாதம்

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக பாராளுமன்றம்  இன்று விசேடமாகக் கூடுகிறது. 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அவசரகாலச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதியினால் ஒவ்வொரு மாதமும் அவசரகாலச்சட்டம் வர்த்தமானி ஊடாக நீடித்து வருவதுடன், பாராளுமன்றத்தில் இதற்கான அங்கீகாரம் பெறப்படுகிறது.  

மேலும் ஒரு மாதத்துக்கு அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் பாராளுமன்றத்தில் இது அங்கீகரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இன்று முழுநாள் விவாதம் நடைபெறவுள்ளது.

அவசரகாலச்சட்டத்தை அடுத்த மாதம் நீடிக்கவேண்டி ஏற்படாது என கடந்தமாதம் நடைபெற்ற அவசரகாலச்சட்ட விவாதத்தில் இராஜாங்க அமைச்சர் கூறியிருந்தபோதும் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரன் பிரசாத்

Sat, 08/31/2019 - 09:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை