இம்ரான் கான்–டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு

ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடைய பாகிஸ்தான் உதவும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெள்ளைமாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நீடித்து வரும் தலிபான்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இராணுவ வீரர்களைப் போல் அல்லாமல், பாதுகாப்பு வீரர் போன்று அங்கு அமெரிக்க படைகள் செயல்பட்டு வருவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

அவ்வாறு இல்லாமல், இராணுவ வீரர்களைப் போல் போரிட்டால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று அவர் கூறினார். அதனால் சுமார் ஒரு கோடி மக்கள் பலியாகி விடுவார்கள் என்பதால் தான் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

தலிபான் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே கடந்த சில வாரங்களாக கட்டாரில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க, பாகிஸ்தான் உதவும் என்று நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.

பாகிஸ்தான் நடவடிக்கையைப் பொறுத்து நிறுத்தப்பட்ட பாதுகாப்பு நிதி உதவி திரும்ப வழங்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆப்கான் அமைதி ஒப்பந்தம் நிறைவேறும் தருவாயில் இருப்பதாக கூறிய இம்ரான்கான், வரும் நாட்களில் ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்களிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை