கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் நடாத்திய மாகாணமட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அம்பாறை மாவட்ட தெரிவு அணியினர் வெற்றியீட்டி, மாகாணமட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட தெரிவு அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, அக்கரைப்பற்று ஆஷா விளையாட்டுக் கழக வீரர்கள் போட்டியில் பங்குபற்றினர். இக்குழுவினரை அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஆர்.றப்ஸான் அஹமட் வழிநடாத்தினார்.
திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற, மட்டுப்படுத்தப்பட்ட 15 ஓவர்கள் பந்து வீச்சுக்களைக் கொண்ட இறுதிப் போட்டியில், முதலில்
துடுப்பாடிய திருகோணமலை மாவட்ட தெரிவு அணியினர் 12 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து மொத்தம் 43 ஓட்டங்களைப்; பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்குத் துடுப்பாடிய அம்பாறை மாவட்ட தெரிவு அணியினர், ஐந்து ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெற் இழப்புக்கு 44 ஓட்டங்களைப் பெற்று
வெற்றியீட்டினர். இதன்மூலம் மாகாணமட்ட சம்பினான அம்பாறை மாவட்ட தெரிவு அணியினர் தேசியமட்ட போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாண மட்ட சம்பினாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தெரிவு அணியினர் நிகழ்வில் பதக்கம் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
(பாலமுனை விசேட ,அட்டாளைச்சேனை மத்திய நிருபர்கள்)
from tkn