உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

இறக்குவானை, கோரளேகம பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கோரளேகம பிரதேசத்தை சேர்ந்த 42வயதுடைய ஒருவரே நேற்று (05) கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அத்தோடு, அச்சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, ரி 56துப்பாக்கி ரவைகள் 05, ஜெலட்னைட் குச்சிகள் 02, 435கிராம் வெடிமருந்துப்பொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Sat, 07/06/2019 - 11:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை