அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் திருவிழாவை முன்னிட்டு மக்கள் சேவைகள் ஆரம்பம்

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் நேற்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் திருவிழா எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகி 31 ஆம் திகதி ஆடி அமாவாசைத் தீர்த்தத்துடன் நிறைவுபெறும். மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனின் ஆலோசனைக்கிணங்க மாநகர சபையின் மின்சாரப் பிரிவினர் வீதிகளில் ஒளிராத மின்குமிழ்களை மாற்றீடு செய்தல் மற்றும் பிரதான சந்திகளின் உயர் வலுக்கொண்ட மின் வலுவில் இயங்கும் (எல்.ஈ.டி) மின்குமிழ்கள் பொருத்தும் வேலைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு விசேட நிருபர்

Tue, 07/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை