வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

அக்கரைப்பற்று றைன்போ கல்லுாரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) அக்கரைப்பற்று கடற்கரை திறந்த பூங்காவில் கல்லுாரியின் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.அஸ்பி தலைமையில் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எப்.நஹ்ஜா முஸாபீர் பிரதம அதிதியாகவும்,அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா,அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தேசியத் தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை கௌரவ அதிதிகளாகவும்,அம்பாறை மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் செயலாற்றுகைப் பணிப்பாளர் ஏ.சீ.சைபுதீன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்கள் பச்சை,மஞ்சள்,சிவப்பு நிற இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு முட்டி உடைத்தல்,பழுன் உடைத்தல்,தேசிக்காய் ஓட்டம்,முப்பாய்ச்சல்,சாக்கோட்டம் போன்ற பல்வேறுபட்ட கலாசார நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றன.

நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வருகை தந்த அதிதிகளினால் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள்,அதிபர்கள்,றைன்போ கல்லுாரியின் நிருவாகத்தினர்,நலன் விரும்பிகள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஒலுவில் கிழக்கு தினகரன்,பள்ளிக்குடிருப்பு தினகரன் நிருபர்கள்

Sat, 07/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை