ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

அரச நிறுவனங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் 03மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாணைக் குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 07/13/2019 - 15:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை