பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக உணவகம், கல்வி நிலையம் திறந்து வைப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பிரிஜிங் லங்கா நிறுவனத்தால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கு வண்ணாகுளம் பகுதியில் உணவகம் மற்றும் கல்வி நிலையம் என்பன திறந்துவைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிற் கோலி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

பெண்களினால் குறித்த உணவகம் முகாமைத்துவம் செய்யப்படவுள்ளது.

போரினால் கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், வலுவிழந்த கணவர்களுடன் வாழும் பெண்கள் தொடர்ச்சியாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வகையில் குறித்த உணவகம் மற்றும் கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் குறூப் நிருபர்

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை