மூதூரில் போதை ஒழிப்பு பேரணி

போதைப் பொருள் அற்ற மூதூரை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் தேசிய போதைபொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்தினை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பேரணியும் சத்தியப்பிரமாண நிகழ்வும் மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில் மூதூரில் நடைபெற்றது.

போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிரான பதாதைகளையும் சுலோகங்களையும் தாங்கிய பேரணியானது மூதூர் பிரதேச செயலகத்திலிருந்து மூதூர் பிரதான வீதி வழியாக மூதூர் பொது விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது .

இதில் பாடசாலை மாணவர்கள் பிரதேச செயலக ஊழிர்கள், பொதுமக்கள் , மதகுருமார்கள் உட்பட பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டிருந்தனர் .

இதனையடுத்து மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவது பற்றிய மதகுருமார்களின் சமய போதனைகளும் நடைபெற்றது. மேலும் போதை ஒழிப்பு தொடர்பான குறு நாடகம் மற்றும் வீதி நாடகங்களும் நடைபெற்றன.

தோப்பூர் தினகரன் நிருபர்

 

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை