சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவின் தென் மாகாணமான டரா மீது இஸ்ரேல் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பதாக சிரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சிரிய இராணுவ முகாம் உள்ள தால் அல் ஹரா குன்று பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் சிரிய அரச செய்து நிறுவனம் மற்றும் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றுக் காலை இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் பற்றி அந்த ஊடகங்கள் மேலும் எந்த தகவலையில் வெளியிடவில்லை. எனினும் இதே இலக்கு மீது ஒரு மாதத்திற்கு முன்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சிரிய வான் பாதுகாப்பு முறை இயங்கியதாக சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது. இதன்போது சில ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் சிலது அதன் இலக்கை தாக்கியதாகவும் அது கூறியது.

இதன்போது உயிரிழப்புகள் பதிவானதாக கண்காணிப்பாளர்கள் கூறியபோதும் அது பற்றிய விபரத்தை வெளியிடவில்லை.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை