அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமை
நுவரெலியாவில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில்நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தன லால் கருணாரத்ன, தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக் சேபால மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் புஷ்பகுமார உட்பட பலரும் கலந்து கொண்டனர். இப் புதிய கட்டடம் 154 .4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் கட்டட நிர்மான பணிகளை ஒரு வருடத்தில் நிறைவு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நுவரெலியா தினகரன் நிருபர்
Thu, 07/18/2019 - 06:00
from tkn