அமெரிக்காவில் வசித்துக்கொண்டே சிலர் அமெரிக்காவை விமர்சிக்கின்றனர். கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் ஒரு காலையும் அமெரிக்காவில் ஒரு காலையும் வைத்துள்ளதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் தமது குடியுரிமையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்து வருபவர்களின்
மனைவியும் பிள்ளைகளும் அமெரிக்க பிரஜாஉரிமை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் எப்போதும் அமெரிக்காவை பற்றியே பேசுகின்றனர். தொலைக்காட்சியில் பார்த்தாலும் கூட்டங்களை நடத்தினாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவே பேசுகின்றனர்.
எனினும் எமது தலைவர்கள் எத்தனை பேர் அமெரிக்காவில் இருக்கின்றனர்?. கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்காவுக்கு எதிராக பேசினாலும் மனைவி அமெரிக்காவில் இருக்கின்றார். மனைவி டிஸ்னிலேண்டில் லொலி பொப் சாப்பிடுகிறார். புதல்வர்கள் அமெரிக்காவில் இருக்கின்றனர். சில தலைவர்களின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் அவுஸ்திரேலியாவில் இருக்கின்றனர். மற்றுமொரு தலைவரின் மகள் அமெரிக்காவில் இருக்கின்றார். எமது கட்சியின் பிரதான அமைப்பாளர்களின் முழு குடும்பமும் அமெரிக்காவில்தான் இருக்கின்றது.
சிலர் குடியுரிமையை இரத்துச் செய்யவில்லை. கடவுச்சீட்டை மட்டுமே ஒப்படைத்துள்ளனர். குடியுரிமையை இரத்துச் செய்து விட்டு வந்தாலும் மனைவியும் மகனும் அமெரிக்காவிலேயே இருப்பார்கள்.
from tkn