லசித் மாலிங்கவுக்கு யுவராஜ் சிங் புகழாரம்

லசித் மாலிங்க போன்ற இன்னொரு பந்துவீச்சாளர் எப்போதும் கிடைக்க மாட்டார் என்று இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மாலிங்க இத்துடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரரான 35 வயதான மாலிங்கவுக்கு இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து யுவராஜ் சிங் ட்விட்டரில், யோக்கர் மன்னன் மலிங்காவின் வெற்றிகரமான கிரிக்கெட் பயணத்துக்கு வாழ்த்துகள்.

பந்து வீச்சின் மூலம் துடுப்பாட்ட வீரர்களின் கால் பாதத்தை பதம் பார்க்கும் அவரை போன்ற இன்னொரு பந்துவீச்சாளர் ஒரு போதும் கிடைக்கமாட்டார். வருங்கால முயற்சிகளும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை