கல்குடா - பாலர் பாடசாலையின் ஒன்பதாவது வருடாந்த விளையாட்டு

ஓட்டமாவடி ஸ்மைல் கிட்ஸ் பாலர் பாடசாலையின் ஒன்பதாவது வருடாந்த விளையாட்டு நிகழ்வு ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எஸ்.எம்.அஹமட் ஹாதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர் எஸ்.ஏ.ஏ.அப்தாப் அலி, மட்டக்களப்பு மத்தி வலய ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.ஜாபீர் ஹரீம், கோறளைப்பற்று மத்தி சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது மாணவர்களின் சங்கீத கதிரை, தண்ணீர் நிரப்புதல், பலூன் ஊதி உடைத்தல், மைதான ஓட்டம் உட்பட பல்வேறு போட்டி நிழ்ச்சிகள் என இடம்பெற்றதுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.

கல்குடா தினகரன் நிருபர்

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை