பங்களாதேஷ் அணி இலங்கை வருகை

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க பங்களாதேஷ் அணி இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணி கடந்த சனிக்கிழமை நாட்டை வந்தடைந்ததுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற பின்பு முதல் தடவையாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை வந்த அணியாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி உள்ளது.

இதனால் பங்களாதேஷ் அணிக்கு பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதோடு அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் பயணிக்கும் பஸ் வண்டிக்கும் விசேட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

“மைதானங்களுக்கும் கூட நாம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்” என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார்.

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை