கிழக்கு மாகாணத்தில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள்

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான 12 வெற்றிடங்கள் கிழக்கு மாகாணம் முழுதும் நிலவி வருவதாக மாகாண சமூக சேவை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் என். மதிவண்ணண் நேற்று முன்தினம் (24) தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,... 

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி, வெருகல், கோமரங்கடவல, மொரவெவ பிரதேச செயலகங்களிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, ஓட்டமாவடி, காத்தான்குடி பிரதேச செயலகங்களிலும், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், மகாஓயா உள்ளிட்ட பிரதேசங்களிலும் மொத்தமாக 12 வெற்றிடங்கள் நிலவுகிறதாகவும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இது தொடர்பான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   

திருமலை மாவட்ட விசேட நிருபர் 

Fri, 07/26/2019 - 08:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை